திமுக, காங். பஞ்சாயத்துத் தலைவர்கள் மீதுbr/நம்பிக்கையில்லா தீர்மானம்

Subscribe to Oneindia Tamil


திருநெல்வேலி:

திருநெல்வேலி மாவட்டம் இலஞ்சி, வடக்கு வள்ளியூர், திருவேங்கடம், சிவகிரி ஆகிய பேரூராட்சி தலைவர்கள் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. 14ம் தேதி இதன் மீது ஓட்டெடுப்பு நடக்கிறது.

இலஞ்சி பேரூராட்சி தலைவர் பிச்சையா (திமுக), திருவேங்கடம் பேரூராட்சி தலைவர் செந்தாமரை கண்ணன் (திமுக), சிவகிரி பேரூராட்சி தலைவர் போஸ் (காங்கிரஸ்), வடக்கு வள்ளியூர் பேரூராட்சி தலைவர் சங்கரநாராயணன் (திமுக) ஆகிய நான்கு பேரூராட்சி தலைவர்கள் மீதும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானங்கள் மீது வரும் 14-ஆம் தேதி காலை 10 மணி இலஞ்சி பேரூராட்சியிலும், அன்று மாலை 3 மணி வடக்கு வள்ளியூர் பேரூராட்சியிலும் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

20ந் தேதி மாலை 3 மணி திருவேங்கடம் பேரூராட்சியிலும், 26ந் தேதி மாலை 3 மணி சிவகிரி பேரூராட்சியிலும் உதவி இயக்குனர் லிங்கேஸ்வரன் தலைமையில் வாக்கெடுப்பு நடக்கிறது.

திமுக, காங்கிரஸ் பேரூராட்சித் தலைவர்கள் மீது சரமாரியாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+