கோவில் காவலாளி கொலை - சிலைகள் திருட்டு
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியில், கோவில் காவலாளியைக் கொன்று சாமி சிலைகள் திருடப்பட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் கொலும்பீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு அதே ஊரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சங்கரன் என்பவர் காவலாளியாக வேலை செய்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த ஒரு கும்பல் சங்கரனின் கை, கால்களை கட்டி வாயில் துணி வைத்து முகத்தில் பிளாஸ்திரி போட்டு ஒட்டியுள்ளனர். இதில் அவர் மூச்சு திணறி இறந்தார்.
பின்னர் கோவிலில் இருந்த பெரிய மாணிக்கவாசகர், சுக்ரீஸ்வரர், நடராஜர், 2 சிவகாமி, அபிநடராஜர், சண்டிகேஸ்வரர் ஆகிய 7 ஐம்பொன் சிலைகளை கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.












Click it and Unblock the Notifications