Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்தபடியாக, மதுரை மாநகரிலே ...

Subscribe to Oneindia Tamil


சென்னை:

மதுரை மாநகர வளர்ச்சிக்கு கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை கிடப்பில் போட்டு விட்ட திமுக ஆட்சியை கண்டித்து மதுரையில் நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

மக்கள் நலத் திட்டங்களில் திமுக அரசு அக்கறை செலுத்துவதில்லை. அதிமுக ஆட்சியில் மக்களுக்குப் பயன்தரும் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் அவற்றை நிறைவேற்றுவதில் திமுக அரசு மெத்தனமாக செயல்படுகிறது. கிடப்பில் போட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியில் ரூ. 1474 கோடி மதிப்பீட்டில் பல திட்டங்களை நிறைவேற்ற ஒப்புதல் வழங்கப்பட்டது. திடக் கழிவு மேம்பாடு, சுகாதார மேம்பாடு, பாலம் அமைத்தல், சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், குடிசை மாற்று சிறப்புத் திட்டம், நவீன மயானம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு முறைப்படி ஒப்புதல் தரப்பட்டது.

ஆனால் இந்தத் திட்டங்களை நிறைவேற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி மக்கள் விரோதப் போக்கை திமுக அரசு கடைப்பிடிக்கிறது.

மதுரை மாநகரின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்ற திமுக அரசு தவறி விட்டது. திட்டங்களை நிறைவேற்றுவதில் திமுக அரசு காலம் தாழ்த்தி வருவதால், மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும், மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்தும் மதுரை தல்லாகுளம் தந்தி அலுவலகம் முன்பு நாளா காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இதற்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தலைமை தாங்குவார். மதுரை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் ராஜன் செல்லப்பா முன்னிலை வகிப்பார் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+