இமாம் அலியின் நண்பர் கைது
தூத்துக்குடி:
அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த இமாம் அலியின் நெருங்கிய கூட்டாளியான அகமது அல் அமீன் என்பவர் தூத்துக்குடி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் காட்டு தைக்கா பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அகமது அல் அமீன். இவர் மதுரை திருமங்கலத்தில் போலீசார் மீது தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிய இமாம் அலியின் நெருங்கிய நண்பர்.
இமாம் அலி தப்பிய போது அவருக்கு உடந்தையாக இவர் இருந்துள்ளார். மேலும் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மேற்கண்ட வழக்குகளில் போலீஸார் கைது செய்தனர். பின்னர் இவர் நிபந்தை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். வேலூரில் தங்கியிருந்து தினசரி கையெழுத்திட வேண்டும் என அமீனுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்படி கையெழுத்துப் போட்டு வந்த அமீன் திடீரென தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவரை தூத்துக்குடி போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், ஆறுமுகநேரி போலீசார் காயல்பட்டிணத்தில் பதுங்கியிருந்த அகமது அல் அமீனை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications