கொல்லம் - மதுரை சாலையில் மறியல்!
கொல்லம்:
செங்கோட்டையிலிருந்து கேளா செல்லும் பாதையில், ஆரியங்காவு முதல் கொல்லம் வரை உள்ள மோசமான சாலையை மாற்றக் கோரி காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள மாநிலம் ஆரியங்காவு முதல் கொல்லம் வரை சுமார் 90 கிமீ தேசீய நெடுஞ்சாலையில் பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது.
இந்தப் பாதை வழியாகத்தான் தமிழகத்திலிருந்து கொல்லம் செல்லும் வாகனங்கள் தினசரி நூற்றுக்கணக்கில் செல்கின்றன. இதனை பழுது நீக்கக் கோரி ஆயிரக்கனக்கான வாகன ஓட்டிகள், பொது நல அமைப்புகள், அரசியல் கட்சியினர் அம்மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தும் தீர்வு ஏற்படவில்லை.
இதனை தொடர்ந்து கொல்லம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் குரியன் தலைமையில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் கொல்லம் - மதுரை திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில், ஆரியங்காவு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கேரளாவுக்கு சரக்கு ஏற்றி செல்ல முடியாமல் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications