கோவை: மயக்கப் பொடியைத் தூவிbr/180 பவுன் நகை கொள்ளை!
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் இன்று அதிகாலை வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மயக்கப் பொடியை ஸ்பிரே செய்து 180 பவுன் நகைகள் மற்றும் ரூ. 1லட்சம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனர்.
கோவை, உக்கடத்தில் வசித்து வருபவர் யூசுப். இன்று அதிகாலை யூசுப்பும் அவரது குடும்பத்தினரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த சிலர், யூசுப் குடும்பத்தினர் மீது மயக்க பொடியை ஸ்பிரே செய்தனர்.
பின்னர் பீரோவில் இருந்த 180 பவுன் நகைகள் மற்றும் ரூ. 1லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பினர்.
இந்த சம்பவத்தால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துணிகரமாக திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications