கோவையை சேலம் கோட்டத்துடன் சேர்க்கbr/கோரி மாணவர் தீக்குளிக்க முயற்சி
கோவை:
சேலம் ரயில்வே கோட்டத்துடன் கோவையும் இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை ரயில் நிலையம் முன்பு சட்டக் கல்லூரி மாணவர் தீக்குளிக்க முயற்சித்தார். ஆனால் போலீஸார் அதைத் தடுத்து நிறுத்தினர்.
சேலம் ரயில் கோட்டத்துடன் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகள் சேர்க்கப்பட வேண்டும் என்று அப்பகுதி அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதை வலியுறுத்தி கோவையில் வருகிற 13ம் தேதி பிரமாண்டப் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், கோவை ரயில் நிலையம் முன்பு சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் தீக்குளிக்கப் போவதாக போலீஸாருக்கு நேற்று தகவல் வந்தது. இதையடுத்து ரயில் நிலையத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
அப்போது பன்னீர் செல்வம் என்கிற சட்டக் கல்லூரி மாணவர் மண்ணெண்ணை கேனுடன் அங்கு வந்தார். அவர் பெரியார் திராவிடக் கழக மாணவர் அணிச் செயலாளர் ஆவார். சேலம் கோட்டத்தில் கோவையையும் சேர்க்க வேண்டும் என்று கோரியபடி மண்ணெண்ணையை தன் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.
இதைப் பார்த்த போலீஸார் பாய்ந்து சென்று அவரைத் தடுத்து மண்ணெண்ணை கேனைப் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications