கோவில்பட்டியில் சாலை மறியல்br/-3 ஆயிரம் பேர் கைது
கோவில்பட்டி:
கோவில்பட்டி வேலாயுதபுரம் ரயில்வே மேம்பாலம் அருகே சர்வீஸ் ரோடு அமைக்க கோரி அனைத்துக் கட்சியினர் சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட 3000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சர்வீஸ் சாலையை அமைக்கக் கோரி அனைத்துக் கட்சியினர் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி சர்வீஸ் ரோடு போராட்டக்குழுவினர் கடந்த 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் அடுத்த கட்டமாக இன்று காலை 11 மணி அளவில் போராட்டக்குழு சார்பில் கோவில்பட்டி எட்டையாபுரம் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
மெயின் ரோட்டில், கொளுத்தும் வெயிலில் ரோட்டில் அமர்ந்து 2000 பெண்கள் உள்பட சுமார் 3000 பேர் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
தகவல் அறிந்ததும் கோவில்பட்டி தாசில்தார் திருநாவுக்கரசு சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
மறியல் தவிர புதுக்கிராமம், இலுப்பையூரணி, தாமஸ்நகர், முகமது சாலியாபுரம், வள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் அனைத்து வியாபாரிகளும் முழு கடையடைப்பு நடத்தினர்.
மேலும் இப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகளும் மூடப்பட்டிருந்தன. வியாபாரிகள் மற்றும் தீப்பெட்டி ஆலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 3000 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications