கோவில்பட்டியில் சாலை மறியல்br/-3 ஆயிரம் பேர் கைது
கோவில்பட்டி:
கோவில்பட்டி வேலாயுதபுரம் ரயில்வே மேம்பாலம் அருகே சர்வீஸ் ரோடு அமைக்க கோரி அனைத்துக் கட்சியினர் சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட 3000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சர்வீஸ் சாலையை அமைக்கக் கோரி அனைத்துக் கட்சியினர் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி சர்வீஸ் ரோடு போராட்டக்குழுவினர் கடந்த 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் அடுத்த கட்டமாக இன்று காலை 11 மணி அளவில் போராட்டக்குழு சார்பில் கோவில்பட்டி எட்டையாபுரம் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
மெயின் ரோட்டில், கொளுத்தும் வெயிலில் ரோட்டில் அமர்ந்து 2000 பெண்கள் உள்பட சுமார் 3000 பேர் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
தகவல் அறிந்ததும் கோவில்பட்டி தாசில்தார் திருநாவுக்கரசு சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
மறியல் தவிர புதுக்கிராமம், இலுப்பையூரணி, தாமஸ்நகர், முகமது சாலியாபுரம், வள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் அனைத்து வியாபாரிகளும் முழு கடையடைப்பு நடத்தினர்.
மேலும் இப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகளும் மூடப்பட்டிருந்தன. வியாபாரிகள் மற்றும் தீப்பெட்டி ஆலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 3000 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications