அணு ஒப்பந்தத்தால் தொடர்ந்து அமளி;br/நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைப்பு!
டெல்லி:
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததால், கூட்டத் தொடர் முடிவடைவதற்கு
நான்கு நாட்களுக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு விட்டன.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைக்க வேண்டும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. இதுதொடர்பாக கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவை அமளியில் ஈடுபட்டு வந்தன.
இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்பட முடியாமல் முடங்கிப் போயின. கடந்த நான்கு நாட்களாக ஒரு அலுவலும் நடைபெறாமல் தினசரி ஒத்திவைக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் நேற்றும் இரு அவைகளிலும் அமளி துமளி நிலவியது. நேற்று லோக்சபா முதலில் பிற்பகல் 12 மணி வரையிலும், பின்னர் பிற்பகல் 2 மணி வரையிலும் அதன் பின்னர் 4 மணி வரையிலும், பிறகு 5 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.
அப்படியும் நிலைமை சரியாகாததால், லோக்சபாவை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்தார். மழைக் காலக் கூட்டத் தொடர் முடிய 4 நாட்கள் இருக்கும் நிலையில் நேற்று முன்கூட்டியே லோக்சபா ஒத்திவைக்கப்பட்டு விட்டது.
இதே நிலைதான் ராஜ்யசபாவிலும் நிலவியது. பலமுறை ஒத்திவைக்கப்பட்ட ராஜ்யசபா இறுதியில் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி அறிவித்தார்.












Click it and Unblock the Notifications