அம்மனிடமிருந்து பிரிக்க 'எதிர்ப்பு'br/கோவிலுக்குள் பூசாரி தற்கொலை!
சென்னை:
அம்மனிடமிருந்து தன்னைப் 'பிரித்து', கல்யாணம் செய்து வைக்க முயற்சிப்பதை எதிர்த்து பூசாரி ஒருவர் கோவிலுக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் பூசாரியாக இருந்தவர் சுரேஷ் குமார் (30). இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார். இந்த இளம் வயதியேலே தீவிர கடவுள் பக்தி கொண்டிருந்த சுரேஷ்குமார், கல்யாணத்தில் நாட்டம் இல்லாமல் சாமியார் போல இருந்து வந்தார்.
இதனால் கவலை அடைந்த அவரது குடும்பத்தினர் சுரேஷ் குமாருக்கு கல்யாணம் செய்து வைக்க முயற்சித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த சுரேஷ்குமார் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தார். தண்டையார்பேட்டையில் வசித்து வரும் தனது அண்ணன் வாசுதேவன் வீட்டில் தங்கினார்.
வாசுதேவன் ஒரு கோவில் பூசாரி ஆவார். அவரது உதவியால், துர்க்கை அம்மன் கோவிலில் பூசாரியாக சேர்ந்தார் சுரேஷ்குமார். இந்த நிலையில் திருமணம் செய்து கொள், அதுதான் நல்லது என்று வாசுதேவனும் வற்புறுத்த ஆரம்பித்துள்ளார்.
அத்தோடு நில்லாமல், பெண் பார்க்கவும் ஆரம்பித்தார். இதனால் அதிருப்தி அடைந்த சுரேஷ்குமார், அம்மனுக்கு சேவை செய்வதே எனக்கு திருப்தியானது. அப்படி இருக்கையில் அம்மனிடமிருந்து என்னைப் பிரித்து கல்யாணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்களே என்று விரக்தி அடைந்தார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோவிலுக்குள் சென்று தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு கூடியது. நூற்றுக்கணக்கானோர் கோவில் முன்பு கூடினர்.
போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications