லாரியிலிருந்து விழுந்து வாலிபர் சாவு;br/உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!
திருநெல்வேலி:
நெல்லையில் லாரி நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது லாரியிலிருந்து விழுந்த இறந்த வாலிபரின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்து அரசு மருத்துவமனை வாசலில் தர்ணா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் தனியார் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் மணி என்ற மணிகண்டன் கிளினராக பணிபுரிந்து வந்தார். சம்பவதன்று இவர் லாரியில் வெல்டிங் செய்து கொண்டிருந்தபோது மேலிருந்து தவறி விழுந்து இறந்தார்.
மணிகண்டன் குடும்பத்தினருக்கு லாரி நிறுவனத்தினர் ஆறுதல் கூட சொல்ல வரவில்லை என்று தெரிகிறது. மேலும், லாரி நிறுவனத்தின் மெத்தனப் போக்கால்தான் மணிகண்டன் இறந்ததாகவும் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் கோபத்துடன் தெரிவித்தனர்.
இதையடுத்து லாரி நிறுவனத்தினர் வந்து சமரசம் பேசும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று மருத்துவமனை வாளகத்திலேயே அமர்ந்து விட்டனர்.
இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர் போலீசார் பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மணிகண்டனின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications