சாத்தான்குளத்தில் தமிழ் மண் பாதுகாப்பு மாநாடு
Subscribe to Oneindia Tamil
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வருகிற அக்டோபர் 20ம் தேதி தமிழ் மண் பாதுகாப்பு மாநாடு நடத்தப்படும் என்று பாட்டாளி தமிழர் முன்னணி அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாட்டாளி தமிழர் முண்ணனியின் தலைவர் வியனரசு செய்தியாளர்களிடம் கூறுகையில், டாடா நிறுவனத்தை எதிர்த்து சாத்தான்குளத்தில் வரும் அக்டோபர் 20-ந் தேதி தமிழ் மண் பாதுகாப்பு மாநாடு பாட்டாளி தமிழர் முன்னணி சார்பில் நடத்தப்பட உள்ளது.
இம்மாநாட்டில் கலந்து கொள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன், உலகத் தமிழ் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அழைக்கப்பட உள்ளனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications