10 ராமேஸ்வரம் மீனவர்கள் கடத்தல்br/இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் அருகே இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை அத்துமீறித் தாக்கிய இலங்கை கடற்படையினர் 10 பேரை பிடித்துச் சென்று விட்டனர். இதனால் ராமேஸ்வரத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 400க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் நேற்று மீன் பிடிக்கச் சென்றனர்.
கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லைக்குள் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அஙகு இலங்கை கடற்படையினர் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் தமிழக மீனவர்களை கடுமையாக தாக்கினர்.
பிறகு அமரன், மாணிக்கம், மணி, ஸ்டாலின் உள்ளிட்ட 10 மீனவர்களை தங்களுடன் அழைத்துத் சென்றனர். அவர்களுடைய படகுகளையும் கொண்டு சென்று விட்டனர்.
தப்பி வந்த மீனவர்கள் ராமேஸ்வரம் மீனவர்களிடம் இந்த தகவலைக் கூறினர். இதையடுத்து காவல்துறை மற்றும் மீன்வளத்துறையில் புகார் கொடுக்கப்பட்டது.
10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடத்திச் சென்ற சம்பவத்தால் ராமேஸ்வரத்தில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications