அள்ளுங்கள், பாவம் போகும் - தா.பா தாக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவல்துறையினர் செய்த பாவங்கள் கொஞ்சமா, நஞ்சமா. அந்தப் பாவங்களை போக்க வேண்டும் என்றால் அவர்கள் குப்பைகளை அள்ள வேண்டும். அப்போதுதான் பாவம் போகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
சென்னை அருகே தாம்பரத்தில் நடந்த ஒரு கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் தா.பாண்டியன். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
காவல் துறையினர் செய்த பாவங்கள் ஏராளம். அவர்கள் அந்த பாவங்களை போக்க வேண்டும் என்றால் சென்னையில் குப்பைகளை அள்ளி புண்ணியத்தை தேடிக் கொள்ள வேண்டும். குப்பையும் போகும், அவர்களது பாவங்களும் நீங்கும்.
ஒரு அணியில் சேர்வதும், விலகுவதும் ஜெயலலிதாவுக்கு கைவந்த கலை. அத்வானிக்கு ஜெயலலிதா விருந்து கொடுக்க இருப்பதாக தகவல் வந்திருப்பதைப் பார்த்தால், அவர் 3வது அணியில் இல்லை என்றே தெரிகிறது என்றார் தா.பாண்டியன்.












Click it and Unblock the Notifications