முஸ்லீம் பகுதியில் விநாயகர் ஊர்வலம்:br/பள்ளபட்டியில் பதட்டம்
கரூர்:
கரூர் மாவட்டம் பள்ளபட்டி பகுதியில், முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியின் வழியாக விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்த இந்து முன்னணி திட்டமிட்டிருப்பதால் அங்கு பெரும் மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது.
பள்ளபட்டி இந்திரா நகர் பகுதியில் விநாயகர் ஊர்வலம் புறப்பட்டு பள்ளபட்டி நகரைச் சுற்றி வர போலீஸ் அனுமதியை இந்து முன்னணி பெற்றிருந்தது. இப் பகுதியில் ஊர்வலமாக செல்லும் விநாயகர் சிலைகளை கடைசியாக நல்காஞ்சி ஆற்றில் கரைக்கவும் தீர்மானித்திருந்தனர்.
இதற்கு முஸ்லீம் அமைப்புகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து இந்து முன்னணிக்கு கொடுத்த அனுமதியை காவல்துறை ரத்து செய்து விட்டது. ஆனால் இதை ஏற்க இந்து முன்னணி மறுத்து விட்டது. தடையை மீறி ஊர்வலத்தை திட்டமிட்டபடி நடத்துவோம் என அவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் இப் பகுதியில் கலவர சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸார் அங்கு தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications