விபத்தில் தேமுதிக நிர்வாகி பலி-மாநாட்டுக்கு சென்றவர்
திருச்சி:
புதுக்கோட்டையில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டிற்கு சென்ற தேமுதிக நிர்வாகி விபத்தில் பலியானார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகேயுள்ள பரியந்தல் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் உளுந்தூர்பேட்டை ஒன்றிய துணைச் செயலாளராக உள்ளார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டிற்கு தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்றார்.
அப்போது திருச்சி புற வழிச் சாலையில் அய்யம்பேட்டை பகுதியில் அவ்வழியாக வந்த லாரியின் பின் பக்க கதவு திடீரென திறந்து தேமுதிக வாகனம் மீது வேகமாக மோதியது.
இதனால் வேனின் முன் பக்கம் நெறுங்கியது. இந்த விபத்தில் உளுந்தூர்பேட்டை ஒன்றிய துணைச் செயலாளராக உள்ள இளங்கோவன் அதே இடத்தில் பலியானார்.
மேலும் வாகனத்தில் வந்த ஒட்டுனர் சரவணன், மற்றும் தேமுதிக நிர்வாகிகள் பன்னீர் செல்வம் ஆகியோர் காயமடைந்தனர். இவர்களை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications