சரத் ஆதரவு திமுக தொழிலதிபரைbr/எதிர்த்து போஸ்டர் - சுரண்டையில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

நெல்லை:

சரத்குமாருக்கு ஆதரவாக பேசிய திமுகவைச் சேர்ந்த தொழிலதிபரை எதிர்த்து நெல்லை மாவட்டம் சுரண்டையில் திமுகவினர் போஸ்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Sarathkumar with Ganesan
திருநெல்வேலி மாவட்டம் சுரண்டையை சேர்ந்தவர் தொழில் அதிபர் எஸ்.வி.கணேசன். இவர் திமுகவின் அனுதாபி. தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக உள்ளார்.

சமீபத்தில் நடிகர் சரத்குமார் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது எஸ்.வி.கணேசன் சரத்குமாருக்கு ஆதரவாகவும் திமுகவிற்கு எதிராகவும் மேடையில் பேசியனார்.

மேலும் சரத்குமார் தனிக்கட்சி தொடங்கியதற்கு எஸ்.வி.கணேசன் செய்திதாள்களில் விளம்பரமும் கொடுத்தாராம். இதனால் கோபம் அடைந்த திமுகவினர் அவருக்கு எதிராக சுரண்டை வட்டார பகுதிகள் முழுவதும் Condemned posterஅறங்காவலர் குழு பதவியை ராஜினமா செய்ய வலியுறுத்தி போஸ்டர் போர் நடத்தியுள்ளனர்.

இதனை அறிந்த எஸ்.வி. கணேசன் ஆதரவாளர்கள் அந்த போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தென்காசி தொகுதியில் திமுக வெற்றிக்கு அதிகம் உழைத்தவர் எங்கள் அண்ணாச்சி. மேலும் சுரண்டை பேருந்து நிலையம் அமைய ரூ.1 கோடி மதிப்புள்ள சொந்த நிலத்தை தானமாக கொடுத்துள்ளார். அவருடைய வளர்ச்சியை பிடிக்காத சிலர் இது போல் செய்கின்றனர் என்றனர்.

ஆனால் திமுகவினர் கூறுகையில், எங்கள் தலைவர் ஸ்டாலின் கொடுத்த பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் பதவியை பறிப்போம் என்றனர்.

இந்தப் பஞ்சாயத்து காரணமாக சுரண்டையில் பரபரப்பு நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+