வெள்ளத்தில் சிக்கிய ஐந்து பேரை காப்பாற்றிய சிறுமிக்கு இலவசக் கல்வி
புர்னியா (பீகார்):
வெள்ளத்தில் சிக்கித் தவித்த 5 பேரை காப்பாற்றிய சிறுமிக்கு இலவசக் கல்வி தர பீகார் முதல்வர் நிதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
பீகார் மாநிலம் புர்னியா மாவட்டத்தில் பானர் ஆற்றில் படகு ஒன்று சென்ற பொழுது வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அதில் பயணம் செய்தவர்கள் உதவி கேட்டு குரல் கொடுத்ததும் பர்ஜானா எனும் 15 வயது சிறுமி உடனடியாக ஆற்றில் குதித்து ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் மூன்று குழந்தைகளை ஆற்று வெள்ளத்தில் இருந்து காப்பாற்றினார்.
பர்ஜானா சிறு வயதிலேயே நீச்சலை கற்றுக் கொண்டதாக அவரது தந்தை ஜமீல் அஹமது தெரிவித்தார். வசதியின்மை காரணமாக பள்ளிப் படிப்பை பர்ஜானாவால் தொடர இயலவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பர்ஜானாவிற்கு இலவசக் கல்வி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் தீரச்செயல் புரிந்தமைக்கான தேசிய விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications