For Quick Alerts
For Daily Alerts
Just In
திருச்சியில் அமைதியாக முடிந்த விநாயகர் சிலை ஊர்வலம்
திருச்சி:
திருச்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த விநாயர் சிலை ஊர்வலங்கள் அமைதியாக நடந்து முடிந்தன.
திருச்சியில், நேற்று மாலை 120க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
அனைத்து சிலைகளும் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்ன. விநாயகர் சிலை ஊர்வலம் பொதுவாக அமைதியாக நடந்தது.
அண்ணா சிலை பகுதியில் ஊர்வலம் வந்தபோது லேசான கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்தினர். இதில் 6 பேர் காயமடைந்தனர்.
இதேபோல முசிறி, ஜீயர்புரம், மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடந்தன.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 22:25 [IST]