சிறுபான்மையினரை ஏமாற்றும் கருணாநிதி-பாஜக
விருதுநகர்:
சிறுபான்மை மக்களை கருணாநிதி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என பாஜக மாநில பொது செயலாளர் ராஜா கூறியுள்ளார்.
விருநகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சிறுபான்மை மக்களுக்கு இட ஒதுக்கீட்டை முதலில் ஆந்திரா அரசு கொண்டு வந்தது. ஆனால் பின்பு அது கைவிடப்பட்து.
தமிழகத்தில் அச் சட்டத்தை கொண்டுவர முடியாது என தெரிந்தும் கருணாநிதி ஏமாற்றுகிறார்.
சிறுபான்மை மக்களை ஆதரிப்பதாக கூறிக் கொண்டு செயல்படுவது பெறும்பான்மை மக்கள் மனதை புண்படுத்துகின்றது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாகியுள்ளது.
தமிழகத்தில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. தமிழக அரசு சைக்கிள் சைக்கிள் வாங்கும் கம்பெனியில் தான் மத்திய பிரதேச அரசும் வாங்குகிறது. ஆனால் தமிழக அரசு ரூ. 200 அதிகம் கொடுத்து வாங்குகிறது.
அதிமுக-பாஜக கூட்டணி குறித்து அகில இந்திய பாஜக தான் முடிவு செய்யும் என்றார்.












Click it and Unblock the Notifications