For Daily Alerts
Just In
துபாயில் உரையாற்றும் பெனாசிர்
துபாய்:
துபாயில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ வியாழக்கிழமை பொது நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றுகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக லண்டன் மற்றும் துபாயில் வசித்து வரும் பெனாசிர் பூட்டோ விரைவில் பாகிஸ்தான் திருமப் இருக்கிறார்.
அதற்கு முன்னதாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அக்ரம் பாரூக்கி மற்றும் அப்பாஸ் ஆகியோர் பெனாசிர் பூட்டோவின் மறைந்த சகோதரர் முர்துஷா பூட்டோ நினைவு தினத்தையொட்டி வியாழக்கிழமை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பெனாசிர் பூட்டோ உரை நிகழ்த்துகிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பொது நிகழ்ச்சி ஒன்றில் பெனாசிர் பூட்டோ உரை நிகழ்த்த இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Story first published: Saturday, December 15, 2007, 18:08 [IST]