மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம்!
சிவகங்கை:
மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த பலே கணவரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகஙகை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் ஆகின்றன.
இந்நிலையில் சரவணனுக்கும் சாந்திக்கும் இடையே அடிக்கடி தகறாறு ஏற்படுமாம்.
இந் நிலையில் பக்கத்து வீட்டிற்கு அழகிய பெண் ஒருவர் குடி வந்துள்ளார். அவர் அழகில் மயங்கிய சரவணன், கள்ளக் காதல் கொண்டார். தனது காதல் வலையால் அந்தப் பெண்ணை வீழ்த்தினார்.
மனைவி இல்லாத தருணத்தில் அப் பெண்னின் வீட்டிற்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
கள்ளக் காதல் முற்றிப் போய், மனைவி சாந்திக்கு தெரியாமல் பக்கத்து வீட்டுப் பெண்னை திருகோஷ்டியூர் கோவிலில் வைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இத் தகவல் சாந்திக்குத் தெரிய வரவே, அவர் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சரவணன் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications