காதலுக்காக மருத்துவ மாணவர் தற்கொலை!

Subscribe to Oneindia Tamil


மதுரை:

தனது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை மருத்துவக் கல்லூரியில் சேலத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்ற மாணவர் படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் மதுரை அரசு மருத்துவமனை அருகில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.

சிவக்குமார் சேலத்தில் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் இதற்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காரணம் இருவரும் வெவ்வேறு ஜாதியினர்.

இதனால் மனமுடைந்த சிவக்குமார் வீட்டீல் யாரும் இல்லாத நேரத்தில் விஷ மாத்திரைகளை தின்றுள்ளார். தான் மாத்திரைகளை தின்றதை தனது பெற்றோருக்கு போன் மூலம் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சிவக்குமாரின் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நண்பர்கள் சிவக்குமாரை காப்பாற்ற மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிவக்குமார் வழியிலே இறந்து விட்டார்.

இது குறித்து மதுரை அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+