தாமிரபரணி தண்ணீருக்காக அதிமுக உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்
திருசெந்தூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு தாமிரபரணி தண்ணீரை திறந்துவிடகோரி அதிமுகவினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
திருச்செந்தூர் உடன்குடி மற்றும் ஆழ்வார் திருநகரி ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் எல்லப்பநாயக்கன் குளத்தை தூர் வாராததை கண்டித்தும், தாமிரபரணியிலிருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரியும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
திருச்செந்தூர் வ.உ.சி திடலில் தொடங்கிய உண்ணாவிரதத்தை அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் செம்மலை தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் மற்றும் திருசெந்தூர் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications