நகராட்சியின் குப்பை குளறுபடி எதிர்த்து அதிமுக நாளை போராட்டம்
சென்னை:
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி நகராட்சியின் நிர்வாக குளறுபடியை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
ஈரோடு சூரம்பட்டி நகராட்சி திமுக நிர்வாகத்தால், ஏற்கனவே குப்பை கொட்டிக் கொண்டிருந்த இடத்தில் செம்மண் இருப்பதை அறிந்து நகராட்சி தலைவரின் துணையோடு செம்மண்ணை எடுத்து விற்று இருப்பதாக தெரியவந்துள்ளது.
செம்மண் எடுக்கப்பட்ட இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகி காலரா, டெங்கு போன்ற விஷக்காய்ச்சல் பவி வருகிறது. இதனால் அந்த இடத்தில் குப்பை கொட்ட முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆதலால் சூரம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் நாளை அதிமுகவின் ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளர் முத்துசாமி தலைமையில் மாபெரும் ஆர்பாட்டம் நடைபெறும் என்று அவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications