திருப்பதி பிரம்மோத்சவம்: சூர்ய பிரப வாகனத்தில் மலையப்பசாமி ஊர்வலம்
திருமலை:
திருப்பதியில் நடந்து வரும் பிரம்மோத்சவம் விழாவின் 7 நாளான இன்று மலையப்பசாமி ஊர்வலம் நடந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோத்சவம் நடந்து வருகிறது. இன்று 7வது நாள் விழா நடந்தது. இதில் மலையப்பசாமி ஊர்வலம் நடந்தது.
சூர்ய பிரப வாகனத்தில் அமர்ந்திருந்த மலையப்பசாமி மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் ெசல்லப்பட்டார்.
மாலையில் ஊஞ்சல் சேவை நடந்தது. சந்திர பிரப வாகனத்தில் மலையப்ப சாமி ஊர்வலம் நடந்தது.
இதற்கிடையே, பிரம்மோத்சவம் விழாவின் ஒரு பகுதியான கருட சேவை' நிகழ்ச்சியன்று மட்டும் ரூ.ஒரு கோடியே17 லட்சம் உண்டியல் மூலம் வசூலாகியது.
பிரம்மோத்சவத்தின் ஐந்தாவது நாளான நேற்று முன்தினம் கருட சேவை' நிகழ்ச்சி நடந்தது. இதில் ஸ்ரீவாரி உண்டியல் மூலம் ரூ.86 லட்சமும், தரிசன கட்டணம் மூலம் ரூ.18 லட்சமும், சாமி பிரசாதம் மூலம் ரூ.11 லட்சம் கோவிலுக்கு வருவாய் கிடைத்துள்ளது. மொத்தம் 79 ஆயிரத்து 485 பக்தர்கள் கோவிலில் சாமி கும்பிட்டனர்.
பக்தர்களுக்கு உணவு மற்றும் பால் ஆகியவற்றை கோவில் நிர்வாகம் இலவசமாக வழங்கியது.
ஆந்திர பிரதேச அரசு பஸ்கள் மொத்தம் ஆயிரத்து 869 சர்வீஸ்களை இயக்கியது என்று திருப்பதி கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் பிரம்மோற்சவ விழாவையொட்டி கடந்த ஐந்து நாள்களில் கோவிலில் மொத்தம் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மொட்டை போட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கல்யாணகட்டா' துணை நிர்வாக அதிகாரி வெங்கட்டையா கூறுகையில், "கோவிலில் மொட்டை போட வரும் பக்தர்களின் கூட்டத்தை எதிர்பார்த்து கூடுதலாக 40 பெண் நாவிதர்கள் உட்பட 110 நாவிதர்கள் நியமிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் அதிக நேரம் காத்திருப்பதை தவிர்க்க முடிந்தது. ஆண்டுதோறும் 10 லட்சம் பக்தர்கள் மொட்டை போடுவர். ஆனால், பிரம்மோற்சவத்தின் முதல் ஐந்து நாளில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கு மொட்டை போட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications