அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டு!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

அரசு மருத்துவமனையில் பெண் குழந்தையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.

ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் அன்பு காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மன நலம் பாதிக்கப்பட்டவர்களை வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

திண்டல் பகுதியைச் சேர்ந்த மன நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கர்ப்பமான நிலையில் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
எனவே காப்பகத்தினர் அக்குழந்தையை அரசு தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்த்துள்ளனர். பின்னர் அந்த குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அன்பு காப்பகத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறி வந்த மர்ம நபர்கள் சிலர் சிகிச்சை பெற்று வந்த குழந்தையை கடத்திச் சென்றனர்.

பின்னர் காப்பகத்தை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வந்த குழந்தையை பார்க்க வந்த போதுதான் அக்குழந்தையை மர்ம நபர்கள் பொய் சொல்லி கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து ஆர்எம்ஒ பாலசுப்பிரமணி ஈரோடு நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+