நெல்லையில் இலவச பாராசூட், கிளைடர் பயிற்சி!
நெல்லை:
நெல்லை மாவட்டம் நான்குநேரியில் இளைஞர்களை விமானத்ப்படையில் பங்கேற்க செய்யும் வகையில் இலவசமாக கிளைடர் விமானம் ஓட்டுதல் மற்றும் பாராசூட்டில் இறங்குதல் ஆகியவற்றிற்கு இலவச பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.
விமானப்படையில் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். இவர்களுக்கு விமானப்படையின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக மனிதவள மேம்பாட்டுதுறையும், தேசிய சாகச ஊக்குவிப்பாளர்கள் அமைப்பும் இணைந்து இலவச பயிற்சி முகாமை நான்குநேரியில் நடத்த திட்டமிட்டுள்ளன.
இந்தப் பயிற்சி முகாமில் 13 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.
இதில் பங்கேற்பவர்களுக்கு ஒரு நாள் முழுவதும் கிளைடர் விமானம் ஓட்டுதல், பாராசூட் பயிற்சி அளிக்கப்படும். இந்த இலவச பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்புவர்கள் வரும் 25ம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இயக்குநர்,
நேஷனல் அட்வென்சர் பவுண்டேசன்,
ரோசெல்புரம்,
திருவனந்தபுரம்.
இது பற்றிய விவரங்களை 0471-2400740 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயிற்சி குறித்த முழு விவரங்களை பெறலாம்.












Click it and Unblock the Notifications