பள்ளி, கல்லூரிகளில் செல்போனுக்கு தடை- அரசுக்கு காவல்துறை பரிந்துரை
சென்னை
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்போன்கள் கொண்டு வருவதை தடை செய்யுமாறு தமிழக அரசுக்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.
இன்று பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பல மாணவ, மாணவிகள் கேமராவுடன் கூடிய செல்போன்களை வைத்துள்ளனர்.
இந்த செல்போன்களை பயன்படுத்தி மாணவிகளை ஆபாச கோணத்தில் படம் எடுப்பது, அதை மற்ற நண்பர்களுக்கு அனுப்புவது ஆகிய செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து கர்நாடகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் செல்போன் பயன்படுத்த அந்த மாநில அரசு தடை விதித்துள்ளது.
இந் நிலையில் சென்னை சிபிசிஐடி திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு டிஐஜி ஆறுமுகம் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
கடந்த சில மாதங்களுக்கு முன் மணலியில் சுரேஷ் (25) என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் இருக்கும் சுரேஷ், தனது காமிரா செல்போன் மூலம் இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து பலருக்கு அனுப்பி உள்ளார். ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் இந்தப் படங்களை இவர் அனுப்பியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஆபாச படங்கள் அனுப்புபவர்கள் மற்றும் தயாரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இப்போதுள்ள சட்டங்களின் கீழ் இவர்களை கைது செய்தால் அவர்கள் எளிதில் வெளியே வந்து மீண்டும் அதே குற்றத்தை திரும்பவும் செய்கிறார்கள். எனவே சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
பள்ளி, கல்லூரிகளில் படிக்க செல்வோருக்கு எதற்கு செல்போன் என்று தெரியவில்லை. செல்போன் கொண்டு செல்பவர்கள் நல்ல மாணவ-மாணவிகளையும் தவறான வழியில் கொண்டு செல்கிறார்கள்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் காமிரா செல்போன் கொண்டு வர தடை விதிக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு காமிரா செல்போன் வாங்கி கொடுத்து ஊக்கப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் இந்த மாதம் மட்டும் ரூ. 1.2 கோடி மதிப்புள்ள திருட்டு விசிடிக்கள், டிவிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார் டிஐஜி.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications