கன்னியாகுமரி கலையரங்கம்-கனிமொழி அடிக்கல்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரி வரலாற்று கூடத்தில் நூலகம், கலையரங்கம் கட்டுவதற்கு கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் கனிமொழி, தமிழக அமைச்சர்கள் சுரேஷ்ராஜன், பூங்கோதை, பனை வாரியத் தலைவர் குமரி அனந்தன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக விழாவில் கலந்து கொள்ள வந்த கனிமொழிக்கு கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன், ஜெரால்டு உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கே. சிதம்பரதாணு கனிமொழிக்கு நினைவு பரிசு வழங்கினார். பின்னர் கட்சி கொடியை கனிமொழி ஏற்றி வைத்தார்.












Click it and Unblock the Notifications