கார் விபத்தில் உயிர் தப்பிய எஸ்பி
Subscribe to Oneindia Tamil
கரூர்:
வாகன விபத்தில் கரூர் எஸ்பி சண்முகவேல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கரூர் எஸ்பி சண்முகவேல் நேற்று பணிநிமித்தமாக கரூரில் இருந்து திருச்சிக்கு டாடா சுமோ காரில் சென்றார்.
கார் திருச்சி கம்பரசம்பேட்டை அருகில் சென்று கொண்டு இருந்தபோது திருச்சியிலிருந்து கரூர் நோக்கி வந்த ஒரு தனியார் பஸ் எஸ்பி சண்முகவேல் சென்ற கார் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளமாக நொறுங்கியது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக எஸ்பி சண்முகவேலும், அவரது கார் டிரைவர் கதிர்வேலும் உயிர் தப்பினார்கள். இது குறித்து போலீஸ் டிரைவர் கதிர்வேல் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் ஜீயபுரம் போலீசார் தனியார் போருந்து டிரைவர் சங்கர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த பகுதியில் இதே போன்று அடிக்கடி தொடர்ந்து விபத்துகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications