கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காததை எதிர்த்து திருமாவளவன் வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சேலத்தில் உள்ள கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை அனுமதிக்கப்படாததை கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சேலம் கந்தம்பட்டியில் இருக்கும் திரவுபதி அம்மன் கோவிலில் சாமி கும்பிட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
இது தொடர்பாக எங்கள் கட்சியின் சேலம் நகரச் செயலாளர் இமயவரம்பன் காவல்துறையினரிடம் அனுமதி கேட்டார். ஆனால் அவர்கள் முறைப்படி அனுமதி கொடுக்காமல் கோவில் கதவை மூடி சீல் வைத்துவிட்டனர்.
எனவே கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய அனுமதிக்கவேண்டும். காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்ட கோவில் கதலை திறக்க வேண்டி கண்டன ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications