பெண்களை கிண்டல் செய்தவர்களை தட்டிக் கேட்ட வாலிபர் கொலை
விருதுநகர்:
பெண்களை கிண்டல் செய்தவர்களை தட்டிக் கேட்ட வாலிபர் கொலை செய்யப்பட்டார். மற்றொருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்த பந்தல் குடியைச் சேர்ந்தவர்கள் மரியராஜ், வேதமுத்து, ராஜா ஆகியோர் பெண்களை கேலி செய்து வந்துள்ளனர்.
இவர்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் போகவே அதே ஊரைச் சேர்ந்த கோபால்ராஜூம் அவரது நண்பர் முத்துப்பாண்டியும் சேர்ந்து கண்டித்துள்ளனர்.
இதனால் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் கோல்பால்ராஜ் மற்றும் முத்துப்பாண்டியை மரியராஜ், வேதமுத்து, ராஜா ஆகியோர் அரிவாள், கத்தி போன்ற படுபயங்கர ஆயுதங்களால் தாக்கினர்.
இதில் கோல்பால்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த முத்துப்பாண்டி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அருப்புக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மரியராஜ், வேதமுத்து, ராஜா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications