மதானி விடுதலையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பாஜக தலைவர் அத்வானியின் வருகையையொட்டி கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சுமார் 55 பேர் பலியாயினர்.

TN Govt

இதுதொடர்பாக அல்-உம்மா இயக்கத் தலைவர் பாஷா, செயலாளர் அன்சாரி, கேரளா மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல்நாசர் மதானி உள்பட 166 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் இப்போது தான் தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. மதானி மீது எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவரை கோவை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது.

இந்த விடுதலையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கோரி வந்தன.

இந் நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உள்துறை செயலாளர் மாலதி, மதானி விடுதலையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யுமா என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மாலதி, இந்த வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் இன்னும் கிடைக்கவில்லை. அது கிடைத்தவுடன் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து மேல் முறையீடு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

தலைமைச் செயலாளர் திரிபாதி கூறுகையில், இந்த வழக்கில் தீர்ப்பை பகுதி பகுதியாக வழங்கி வருகிறது நீதிமன்றம். இதனால் தீர்ப்பின் நகல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+