சேது-இன்று திமுக கூட்டணிக் கட்சிகள் கூட்டம்
சென்னை:
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக இன்று கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் முதல்வர் கருணாநிதி ஆலோசனை நடத்துகிறார்.
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் ராமர் பாலம் தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த அபிடவிட்டில் கூறப்பட்டிருந்த கருத்துகளுக்கு பாஜக, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அந்த மனு வாபஸ் பெறப்பட்டது.
ராமர் பால பகுதியில் கால்வாய் தோண்ட உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந் நிலையில் இத் திட்டம் தடைபடாமல் தொடர்ந்து நிறைவேற்றப்பட வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியும் திமுக கூட்டணிக் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
இந் நிலையில் இத் திட்டத்தை மத்திய அரசு தொடர்ந்து நிறைவேற்க் கோரி வலியுறுத்த இன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கருணாநிதி கூட்டியுள்ளார்.
மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இக் கூட்டம் நடக்கிறது. இதில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, பாமக, முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.