டி.ஆர்.பாலுவுடன் சோனியா தொலைபேசியில் பேச்சு
சென்னை:
ஒற்றுமையுடன் இருந்து மத வெறியை வென்று, அதையும் தாண்டி மக்களுக்கு நாம் சேவை செய்வோம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
வி.எச்.பி சாமியார் வேதாந்தி, முதல்வர் கருணாநிதிக்கு கொைல மிரட்டல் விடுத்தது குறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு, பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு டி.ஆர்.பாலுவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்ேபாது சோனியா கூறுகையில், இதுேபான்ற பிரச்சினைகளை ஒருங்கிணைந்து சமாளித்து வெளியே வருவோம்.
இதுபோன்ற கோழைத்தனமான மிரட்டல்களுக்குப் பணிந்து விடாமல், பயந்து விடாமல், மக்களுக்கு நாம் சேவை செய்ய வேண்டும். அதில் நமது கவனத்ைத திருப்ப வேண்டும் என்றார் சோனியா.












Click it and Unblock the Notifications