குஜராத்தில் ரயில் தீ- பயணிகள் தப்பினர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குஜராத்தில் வதோதரா அருகே சென்று கொண்டிருந்த ஆவத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது.
கோரக்பூரில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த அந்த ரயில் நேற்றிரவு குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் சென்றபோது எஸ்-10 பெட்டியில் தீப் பிடித்தது. இந்தத் தீ அடுத்தடுத்து 5 பெட்டிகளுக்குப் பரவியது.
இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை.
இரவு முழுவதும் நிறுத்தப்பட்ட இந்த ரயில் இன்று காலை மாற்று பெட்டிகள் பொருத்தப்பட்டு புறப்பட்டுச் சென்றது.












Click it and Unblock the Notifications