4 சிறுவர், சிறுமியர் ஏரியில் மூழ்கி பலி
சென்னை:
சென்னை அருகே செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி 3 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் உள்பட நான்கு பேர் பரிதாபமாக இறந்தனர்.
சென்னை குன்றத்தூரைச் சேர்ந்தவர்கள் சரண்யா, ஷர்மிளா, ராஜேஸ்வரி மற்றும் சந்தோஷ். நான்கு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
நேற்று இவர்கள் நான்கு பேரும் செம்பரம்பாக்கம் ஏரிக்குக் குளிக்கச் சென்றனர். அப்போது சந்தோஷ் ஆழமான பகுதிக்குச் சென்று சேற்றில் சிக்கிக் கொண்டான்.
அது புதை மணல் என்பதால் உள்ளே போக ஆரம்பித்தான். இதையடுத்து உதவி கேட்டு அவன் குரல் எழுப்பவே மற்ற 3 பேரும் அவனைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர்களும் சேற்றுப் புதை மணலில் சிக்கிக் கொண்டனர்.
இறுதியில் நான்கு பேரும் பரிதாபமாக சேற்றில் சிக்கி இறந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர், சிறுமியர் ஏரியில் மூழ்கி இறந்ததால் அவர்களது குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் பெரும் சோகமடைந்தனர்.












Click it and Unblock the Notifications