மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய வாலிபர்
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டையில் குடும்ப தகராறு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை கொடூரமாக வெட்டிக் கொன்றுவிட்டு தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் வாலிபர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் திருக்கண்ணன். இவருக்கு திருமணமாகி ராணி என்ற மனைவியும், திவ்யா, மகாலட்சுமி என்ற 2 மகள்களும் முனீஸ்வரன் என்ற மகனும் இருந்தனர்.
இன்று காலையில் வெகு நேரமாக திருக்கண்ணனின் வீடு திறக்காமல் இருந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உள்பக்கமாக பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில், வீட்டிற்குள் திருக்கண்ணன் தூக்கில் பிணமாக தொங்கியபடி இருந்தார். அவருக்கு கீழே மனைவி மற்றும் 3 குழந்தைகள் பயங்கர வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இந்த சம்பவத்தை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
திருக்கண்ணன், மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விட்டு, பிறகு விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த கொடூர சம்பவம் குறித்து பட்டுக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications