போலி விசா: சென்னையில் இலங்கை தமிழர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போலி விசா மூலம் கொழும்புக்கு பயணிக்க முயன்ற இலங்கைத் தமிழரை சென்னை விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர்.
யாழ்ப்பாணம், மேற்கு வெள்ளணை பகுதியைச் சேர்ந்தவர் கஜீரன் கந்தசாமி (23). இவர் 3 மாதங்களுக்கு முன்பு சுற்றுலா விசா மூலம் சென்னை வந்திருந்தார்.
இவரது விசா செப்டம்பர் 4ம் தேதியுடன் முடிவடைந்தது. இருப்பினும் தொடர்ந்து தங்கிய அவர் போலி விசாவைத் தயாரித்து அதன் மூலம் இன்று அதிகாலை சென்னையிலிருந்து கொழும்பு செல்லும் ஜெட்லைட் விமானத்தில் ஏற வந்தார்.
அப்போது அவரது விசாவை அதிகாரிகள் பரிசோதித்தபோது அது போலியானது என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரை விமான நிலைய போலீஸாரிடம் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
போலீஸார் அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications