For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காரில் 400 கிலோ கஞ்சா கடத்தல்-ஒருவர் கைது

By Staff
Google Oneindia Tamil News

தேனி:

தேனி அருகே போதை தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய ேசாதனையில், காரில் கஞ்சா கடத்தி வந்த நபர் சிக்கினார். அவரிடமிருந்து 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து போதை தடுப்புப் பிரிவு டிஐஜி அருணாச்சலம் கூறுகையில்,
போதை தடுப்புப் பிரிவுக்கு ஆந்திராவிலிருந்து கேரளாவின் இடுக்கி மாவட்டத்திற்கு காரில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக தகவல் வந்தது.

அதன் பேரில் தேனி அருகே இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அண்ணாச்சி விளக்கு என்ற இடத்தில் ஒரு கார் வந்தது. அந்தக் காரை மறித்து சோதனை செய்த போது காரின் பின்சீட்டுக்கு அடியில் 400 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். காரில் இருந்தவர் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சர்ந்த ராமச்சந்திர மூர்த்தி என்பது தெரிய வந்தது. அவரைக் கைது செய்துள்ளோம். காரும் பறிமுதல் செய்யப்பட்டது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X