பெரியார் திக தகவல் பலகை மீது தார் பூச்சு: தூத்துக்குடியில் பரபரப்பு, போலீஸ் குவிப்பு
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் உள்ள பெரியார் தி.கவினரின் தகவல் பலகை மீது தாரை ஊற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் படத்துன் கூடிய தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது.
அதில், ''தமிழக முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து தீவிரவாதி வேதாந்தி எம்.பி.யை கைது செய்ய வேண்டும். அவர் செருப்படி வாங்கும் காலம் நெருங்கி விட்டது- இவண் கருப்பு சட்டை'' என்று எழுதப்பட்டிருந்தது.
இந் நிலையில் யாரோ சிலர் அத்தகவல் பலகையில் உள்ள பெரியார் படத்தின் மீது தாரை ஊற்றியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரியார் தி.க.மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைத்தலைவர் பால்ராஜ், துணைச் செயலாளர் மதன் உள்ளிட்டோர் இன்று காலை அங்கு திரண்டு வந்தனர்.
தகவல் பலகை மீது தார் ஊற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications