For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொள்ளாச்சியை மீட்கும் போராட்டம்; பிரசாரத்தைத் தொடங்கினார் வைகோ!

By Staff
Google Oneindia Tamil News

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளை கேரளாவுக்கு தாரை வார்த்துக் கொடுத்தது கண்டித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று தனது கண்டன பிரச்சாரத்தை தொடங்கினார்.

சேலம் ரயில்வே கோட்டத்தை பெறுவதற்காக, மதுரை கோட்டத்துடன் சேர்ந்திருக்கும் பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவை கேரளாவுக்கு தாரை வார்த்துக் கொடுத்துள்ளனர் தமிழக எம்.பிக்கள்.

இதைக் கண்டித்து சமீபத்தில் மதிமுக சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. பொள்ளாச்சி ரயில்வே பகுதிகளை மீண்டும் பாலக்காடு கோட்டத்தில் சேர்க்காமல், மதுரை அல்லது சேலம் கோட்டத்துடன் இணைக்கும்வரை தனது போராட்டம் தொடரும் என்றும் வைகோ அறிவித்திருந்தார்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப் பகுதிகளில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகியவற்றை மீட்கும் வரை தீவிர பிரசாரம் மேற்ெகாள்ளப் போவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

வைகோவின் பிரசார பயணம் இன்று தொடங்கியது. பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை ஒன்றியத்தில் தனது பிரசாரத்தை வைகோ தொடங்கினார். வைகோவுடன் ஏராளமான தொண்டர்கள் உடன் சென்றனர்.

பொள்ளாச்சியில் உள்ள 74 ஊராட்சிகளிலும் சுற்றுப்பயணம் செய்து, அனைத்து ஊராட்சிகளிலும் தலா 15 நிமிடம் பேசவிருக்கிறார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X