தப்பிய கைதியை கட்டி வைத்து அடித்து கொன்ற நூற்பாலை காவலாளிகள்

Subscribe to Oneindia Tamil


சேலம்:

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி அங்கிருந்து தப்பி தனியார் நூற்பாலைக்குள் நுழைந்தார். அவரை திருடன் என நினைத்து காவலாளிகள் மரத்தில் கட்டி வைத்து அடித்துக் கொன்றனர்.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடராஜன். கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பப்டிருந்தார்.

உடல் நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது போலீஸாரை ஏமாற்றி விட்டு அங்கிருந்து தப்பினார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் பள்ளப்பட்டியில், ஒரு தனியார் நூற்பாலையில் அடையாளம் தெரியாத பிணம் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது பிணமாகக் கிடந்தவர் நடராஜன் என்பது தெரிய வந்தது. தப்பி ஓடிய நடராஜன், இந்த நூற்பாலைக்குள் நுழைந்து பதுங்கியுள்ளார். அப்போது அவரைப் பார்த்த நூற்பாலை காவலாளிகள் அவரைத் திருடன் என நினைத்து மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்துள்ளனர். இதில் நடராஜன் இறந்து விட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக நூற்பாலை காவலாளிகள் நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+