ராணுவ தாக்குதலை முறியடித்த விடுதலைப்புலிகள்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையின் மன்னார் பகுதியில் ஊடுருவ முயன்ற சிங்கள ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்தியதால் ராணுவத்தினர் பின் வாங்கிச் சென்று விட்டனர்.
மன்னார் பகுதியில் கடந்த சில நாட்களாக இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இதில் விடுதலைப் புலிகள் தரப்பில் பலர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள குறிக்கட்டகுளம் என்ற இடத்தில் விடுதலைப்புலிகளின் முகாமைத் தகர்க்க ராணுவம் முன்னேறி வந்தது.
ஆனால் விடுதலைப்புலிகள், ராணுவத்தினர் மீது கடும் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவத்தினர் அங்கிருந்து ஓடி விட்டனர்.
அனைத்து ஆயுதங்களையும், ராணுவ வாகனங்களையும் விட்டு விட்டு தப்பி விட்டனர். இந்த தாக்குதலில் ராணுவத் வீரர் பலியானார். பலர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications