கருணாநிதி மீது ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு
ராஞ்சி:
ராமரை குடிகாரன் என்று கூறிய முதல்வர் கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜார்க்கண்ட் மாநிலம் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ராம் சுபக் சிங் என்ற வழக்கறிஞர் இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில், ராமரை குடிகாரன் என்று கூறிய முதல்வர் கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டோரண்டா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.
ஆனால் அவர்கள் நான் கொடுத்த முதல் தகவல் அறிக்கையின் மீது அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழக முதல்வர் கருணாநிதி, இந்திய அரசியல் சட்டத்தின் 295-ஏ பிரிவின்படி சமூகத்தின் ஒரு தரப்பு மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார்.
எனவே அவரைக் கைது செய்து ஜார்க்கண்ட் கொண்டு வந்து அவர் மீது வழக்கு தொடர வேண்டும். அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க டோரண்டா காவல் நிலையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.