டெல்லியில் சுனிதா வில்லியம்ஸ் - பிரதமரை சந்திக்கிறார்
டெல்லி:
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இன்று டெல்லி வந்தார். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
விண்வெளியில் 195 நாட்கள் தங்கி புதிய சாதனை படைத்துள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், தற்போது இந்தியா வந்துள்ளார்.
சொந்த மாநிலமான குஜராத்துக்கு வந்த அவரை டெல்லிக்கு வருமாறு பிரதமர் மன்மோகன் சிங் அழைத்திருந்தார். இந்த நிலையில் சுனிதா இன்று காலை டெல்லி வந்தார். அங்கு அவருக்கு பெரும் திரளானோர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அமெரிக்க தூதரக அதிகாரிகளும் சுனிதாவை வரவேற்று அழைத்துச் சென்றனர்.
ஹைதராபாத்திலிருந்து டெல்லி வந்த சுனிதா வில்லியம்ஸ், பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 4ம் தேதி வரை அவர் டெல்லியில் தங்குகிறார்.
திங்கள்கிழமை பள்ளி மாணவ, மாணவியரை சந்தித்து உரையாடுகிறார் சுனிதா. தனது விண்வெளி அனுபவங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.












Click it and Unblock the Notifications