ஆலடி அருணா கொலை வழக்கு முன்னாள் கலெக்டருக்கு கோர்ட் சம்மன்
திருநெல்வேலி:
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு நெல்லை மாவட்ட முன்னாள் ஆட்சித் தலைவர் அதுல் ஆனந்த்திற்கு நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஆலடி அருணா கொலை வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கொலை நடந்த 2004ம் ஆண்டு டிச 31ம் தேதி எதிரிகளாக சேர்க்கப்பட்ட பென்னி மற்றும் வேல்துரை ஆகியோரிடம் துப்பாக்கிகள் இருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
துப்பாக்கி உரிமத்தை கலெக்டர் வழங்கும் நடைமுறை உள்ளதால் இதுகுறித்து அப்போதைய கலெக்டரிடம் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கூறி அரசு வக்கீல் செல்வராஜ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி பாஸ்கரன், அக் 5ம் முன்னாள் ஆட்சித் தலைவர் அதுல் ஆனந்த் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என கூறி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications