கருணாநிதிக்கு நல்ல புத்தி தரக் கோரி லக்னோவில் மகா யாகம்!!
லக்னோ:
முதல்வர் கருணாநிதி உள்பட ராமரை நிந்திப்பவர்களுக்கு நல்ல புத்தி தரக் கோரி லக்னோவில் அயோத்தியைச் சேர்ந்த சாமியார் ஒருவர் 'புத்தி ஷுத்தி மகாயாகம்' நடத்தினார்.
அயோத்தியைச் சேர்ந்த ராஜகுரு மகிந்திரா மஹராஜ் என்கிற அந்த சாமியார், லக்னோவில் இதற்காக சிறப்பு யாகத்தை ஏற்பாடு செய்திருந்தார். அவர் கூறுகையில், மக்கள் மனதில் ராமர் குறித்தும், ராமர் பாலம் குறித்தும் உள்ள தவறான எண்ணங்களை அழித்து சுத்தம் செய்யவே இந்த யாகம்.
குறிப்பாக ராமரை நிந்திக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நல்ல புத்தி தர வேண்டும் என்று வேண்டி இந்த யாகத்தை நடத்தினோம். இந்த யாகம் மூலம் அனைவரின் மனமும் சுத்தமடையும்.
நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அசல் பிரதியில் ராமர் மற்றும் கிருஷ்ணரின் படங்கள் இடம் பெற்றுள்ளன. இப்போது அவர்கள் இல்லை என்றால், அரசியலமைப்புச் சட்டமும் பொய் என்றாகி விடும்.
கடவுள்களையும், நம்பிக்கைகளையும் இல்லை என்று சொல்வது ஒரு அரசியல் தலைவருக்கு அழகல்ல என்றார் அவர்.












Click it and Unblock the Notifications