குமரியில் கோவா ஆளுநர் மனைவிக்கு உடல் நலக்குறைவு!
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் கோவா ஆளுநர் மனைவிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரிக்கு நேற்று கோவா கவர்னர் எஸ்.சி. ஜமீர் தனது மனைவியுடன் வருகை தந்தார். அவர் தனது மனைவியுடன் கன்னியாகுமரியில் உள்ள கேரளா அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரது மனைவி அல்மேலாவுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. இதனால் அவர் மயக்க நிலைக்கு ஆளானார். இது குறித்து உடனே கன்னியாகுமரி அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் கேரளா அரசு விருந்தினர் மாளிகைக்கு விரைந்து வந்து கோவா ஆளுநரின் மனைவிக்கு முதல் உதவி சிகிச்சையும், முக்கியமான சிகிச்சைகளையும் செய்தனர்.
பின்பு ஆளுநர் மனைவியை மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல தனியார் சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து டாக்டர்கள் தீவீர சிகிச்சை அளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications